Search This Blog

Friday 11 April 2014

ஊர் குருவி

ஊர் குருவி  

உயர உயர பறக்கிறேன்
குருவி என எண்ணாமல் !

விடிய விடிய எழுதுகிறேன்
விடியும் என்ற நம்பிக்கையுடன் !

வீடா வீதியா காடா
என்று தினமும் நினைத்துவிட்டேன் !

தேடும் தேடிய உறவுகளில்
தொடும் நெஞ்சம் யார்நமக்கு !

தொட்டு தொட்டு பழகும்இதயம்
தொடர்ந்து நன்மை செய்துவிடும் !

முத்து முத்தான எண்ணங்கள்
மனதினில் என்றும் குடிப்பெயர்ந்திடும் !

எத்துணை எதுவுமின்றி நம்மால்
புதுமைதனை செய்தல் நலமா !

புதுமைதனை புதுமையுடன் செய்திட
நற்றுணை நமக்கு வேண்டும் !

கற்றவையெல்லாம் கைக் கொடுக்கும்
கலங்கிடும் எண்ணங்கள் பொய்திடவே !

அல்லவை அல்ல நல்லவை
என்றும் உள்ளத்தில் விளங்கிடும் !

உள்ளவை இவையென உலகினில்
உயர்ந்திட வழி வகுத்திடும் !

உயர்ந்திட உயர்ந்திட மேதினில்
உயர்த்திட்ட உள்ளங்களை உணர்ந்துவிடு !

ஏற்றிய ஏணி சிறிதென்றாலும்
ஏற்றிய உள்ளமதை மறந்திடாதே !

சிதறிய சிறுசிறு உண்மைகள்
மனதினில் என்றும் கொண்டுவிடு !

சிறந்திடும் சிறந்திடும் வாழ்க்கையது
குருவியினைப் போன்று சிறகடித்து !

**************************************************************************
இனிய 'ஜெய' தமிழ் புத்தாண்டிலே
சிறந்திடும் சிறந்திடும் உன் வாழ்க்கையது !

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் !!

No comments:

Post a Comment