Search This Blog

Sunday 15 June 2014

காதலை பணத்திற்கு பலியும் தந்தேன்  

காதலை பணத்திற்கு பலியும் தந்தேன்  

விடும் மூச்சுக்கு நான் விடுதலை
தந்தேன்

விடுகதைக்கு ஒரு விடையை
தந்தேன்

விருப்பத்திற்கு பேராசையை கூட்டி
தந்தேன்

விரல் சுகத்திற்கு உந்தன் மேனியின்
ஸ்பரிசம் தந்தேன்

வீசிடும் காற்றுக்கு என் அறிமுகம்
தந்தேன்

வீணையின் நாதத்திற்கு நல்லதொரு
பாட்டை துணைக்கு தந்தேன்

வீரத்திற்கு வாள் வீச்சை பழக்கி
தந்தேன்

விண்மீனுக்கு வானத்தில் படுக்கை
அமைத்து தந்தேன்

வெண்ணிலவுக்கு கதிரவனின் நட்பினை
அழைத்து தந்தேன்

விந்தைகள் பலவும் அத்தனை பேர்க்கும்
தந்தேன்,

கடைசியில் என் காதலை பணத்திற்கு
பலியும் தந்தேன்

கவிதை ஒன்றை மட்டும் இன்று
உலகிற்கு தந்தேன்

கவிஞன் என்ற பெயர் மட்டும்
எனக்கு தந்தேன்

No comments:

Post a Comment